இந்தியாவில் டிரம்ப்: இந்த பயணத்தால் அமெரிக்க அதிபர் சாதிக்க நினைப்பது என்ன

முதன்முறையாக இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியாவுக்கு வரும் ஏழாவது அமெரிக்க அதிபர் டிரம்ப். தூதரக உறவுகள் மற்றும் பாதுகாப்பு பற்றி எழுதும் ருத்ரா சௌத்ரி, இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறார் இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.


டிரம்பின் இரண்டு நாள் பயணம் அவருடைய ’பெருமையைக்’ கூட்டுவதற்காக, முக்கியமாக, 2020 அமெரிக்க பொதுத் தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து கொள்வதற்கானதாக திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் அவர் மூன்று நகரங்களுக்குச் செல்கிறார்: நாட்டின் தலைநகர் டெல்லி; ஆக்ரா, அங்கு தாஜ்மஹாலை பார்க்கிறார்; மற்றும், குஜராத் மாநிலத்தில் பிரதானமான ஆமதாபாத் நகரம், அங்கு 100,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார். அந்த நிகழ்வுக்கு, ``நமஸ்தே டிரம்ப்'' என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டன் நகரில் பங்கேற்ற ``Howdy, Modi!'' என்ற நிகழ்ச்சிக்குப் பிரதி உபகாரமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் நரேந்திர மோதியும், டிரம்ப்பும் அமெரிக்காவில் வாழும் 50,000 இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினர்.