கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,800 யைத் தொட்டுள்ளது. விண்ணை முட்டும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்தியாவில், ஒரு ஆண்டுக்குள் சுமார் 26 சதவீதம் விலை உயர்ந்த ஒரே பொருளாக தங்கம் இருக்கிறது. மியூச்சுவல் பண்டு, நிரந்தர வைப்பு நிதி மற்றும் பங்குச்சந்தை என விதவிதமான முதலீடுகள் செய்தவர்களை விட, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் பெற்றுள்ளனர்.
தங்கத்தின் விலையேற்றத்திற்கான காரணம் என்ன, கொரோனா வைரஸ் எவ்வாறு தங்கத்தின் விலையை அதிகரித்தது என்றும், தங்கத்தில் தற்போது முதலீடு செய்வது எப்படி என சென்னையை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.